\id JOL - Biblica® Open Indian Tamil Contemporary Version \ide UTF-8 \h யோயேல் \toc1 யோயேல் \toc2 யோயேல் \toc3 யோயே. \mt1 யோயேல் \c 1 \p \v 1 பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை: \b \s1 வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு \q1 \v 2 முதியோரே, இதைக் கேளுங்கள்; \q2 நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள். \q1 உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ, \q2 இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ? \q1 \v 3 இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; \q2 உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும், \q2 அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும். \q1 \v 4 பச்சைப்புழு விட்டதை, \q2 இளம் வெட்டுக்கிளிகள் தின்றன; \q1 இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை, \q2 துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன; \q1 துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை, \q2 வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன. \b \q1 \v 5 குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; \q2 திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் \q1 இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; \q2 ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. \q1 \v 6 வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான \q2 வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது. \q1 அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; \q2 பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு. \q1 \v 7 அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி, \q2 என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது. \q1 அது அவற்றின் பட்டைகளை \q2 உரித்து எறிந்தது, \q2 அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது. \b \q1 \v 8 தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி \q2 அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள். \q1 \v 9 தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் \q2 யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின. \q1 யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள் \q2 புலம்பி அழுகிறார்கள். \q1 \v 10 வயல்வெளிகள் பாழாயின, \q2 நிலமும் உலர்ந்துபோயிற்று; \q1 தானியம் அழிந்தது, \q2 புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று; \q2 எண்ணெயும் குறைவுபடுகிறது. \b \q1 \v 11 விவசாயிகளே, கலங்குங்கள், \q2 திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்; \q1 கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; \q2 ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று. \q1 \v 12 திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று, \q2 அத்திமரம் வாடிப்போயிற்று. \q1 மாதுளையும், பேரீச்சையும், \q2 ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின் \q1 எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று; \q2 மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று. \s1 மனந்திரும்புதலுக்கு அழைப்பு \q1 \v 13 ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; \q2 பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; \q1 என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, \q2 வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். \q1 ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து \q2 தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. \q1 \v 14 பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்; \q2 பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். \q1 முதியோரையும், \q2 நாட்டில் வாழும் அனைவரையும் \q1 உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து, \q2 யெகோவாவை நோக்கிக் கதறுங்கள். \b \q1 \v 15 அது எவ்வளவு பயங்கரமான நாள், \q2 யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது; \q2 அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும். \b \q1 \v 16 எங்கள் கண்களுக்கு முன்பாகவே \q2 உணவும், \q1 நம் இறைவனின் ஆலயத்திலிருந்து \q2 மகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ? \q1 \v 17 மண்கட்டிகளின் அடியில் \q2 விதைகள் காய்ந்து போயிருக்கின்றன. \q1 தானியம் அற்றுப்போனதால் \q2 பண்டகசாலைகள் பாழாகி, \q2 தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின. \q1 \v 18 வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன; \q2 மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றி \q1 கலங்குகின்றன; \q2 செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன. \b \q1 \v 19 யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன், \q2 ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது; \q2 வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன. \q1 \v 20 காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; \q2 நீரோடைகள் வற்றிப்போய்விட்டன, \q2 வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது. \c 2 \s1 வெட்டுக்கிளிகளின் படை \q1 \v 1 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், \q2 என் பரிசுத்த குன்றிலே எச்சரிப்பின் ஒலியை எழுப்புங்கள். \b \q1 நாட்டில் வாழும் அனைவரும் நடுங்குவார்களாக; \q2 ஏனெனில், யெகோவாவின் நாள் வருகிறது. \q1 அது நெருங்கி வந்திருக்கிறது. \q2 \v 2 அது இருளும் காரிருளும் கலந்த நாள், \q2 மப்பும் மந்தாரமும் நிறைந்த நாள். \q1 விடியற்காலை வெளிச்சம் மலைகளின்மீது பரவுவதுபோல் \q2 வலிமைமிக்க வெட்டுக்கிளிகளின் பெரும் படையொன்று வருகிறது! \q1 இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை, \q2 வரப்போகும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை. \b \q1 \v 3 அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும், \q2 அவற்றிற்கு பின்னாக நெருப்புப் பற்றியெரியும். \q1 அவற்றிற்கு முன்னாக நாடு ஏதேன் தோட்டத்தைப் போலவும், \q2 அவற்றிற்குப் பின்னாக நாடு பாழான பாலைவனம் போலவும் இருக்கிறது; \q2 அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை. \q1 \v 4 அவை குதிரைகளின் தோற்றமுடையவை; \q2 அவை குதிரைப் படைபோல் பாய்ந்தோடுகின்றன. \q1 \v 5 தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும், \q2 காய்ந்த சருகுகளை எரிக்கும்போது எழும்பும் சத்தத்துடனும், \q1 யுத்தத்திற்கு அணிவகுக்கும் வலிமைமிக்க படையைப்போல் \q2 அவை மலைமேல் பாய்ந்து வருகின்றன. \b \q1 \v 6 அவைகளைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்; \q2 பயத்தால் எல்லாருடைய முகங்களும் வெளிறிப்போகும். \q1 \v 7 வெட்டுக்கிளிகள் இராணுவவீரரைப்போல் தாவி ஓடுகின்றன; \q2 அவை போர் வீரரைப்போல் மதில்களில் ஏறுகின்றன. \q1 அவை தங்கள் பாதையிலிருந்து விலகாமல் \q2 நேராய் அணிவகுத்துச் செல்கின்றன. \q1 \v 8 அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல் \q2 ஒவ்வொன்றும் தன் வழிதவறாமல் செல்கின்றன. \q1 அணிவகுப்பைக் குலைக்காமல் \q2 போராயுதங்களை இடித்து முன்னேறுகின்றன. \q1 \v 9 அவை நகரத்தை நோக்கி விரைகின்றன; \q2 மதில்கள்மேல் ஓடுகின்றன. \q1 வீடுகளுக்குள் ஏறுகின்றன; \q2 அவை திருடர்களைப்போல் ஜன்னல் வழியே நுழைகின்றன. \b \q1 \v 10 அவற்றின் முன்பாக பூமி அதிருகிறது, \q2 வானம் அசைகிறது. \q1 சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன, \q2 நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கின்றன. \q1 \v 11 யெகோவா தமது படையின் முன்னின்று முழக்கமிடுகிறார்; \q2 அவருடைய பாளையம் மிகப்பெரியது, \q1 அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறதற்கு \q2 வலிமைமிக்கது. \q1 யெகோவாவின் நாள் பெரிதும் \q2 பயங்கரமுமானது. \q2 அதை யாரால் சகிக்கமுடியும்? \s1 மனமாறுங்கள் \q1 \v 12 ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி, \q2 உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்” \q2 என்று யெகோவா அறிவிக்கிறார். \b \q1 \v 13 உங்கள் உடைகளையல்ல, \q2 உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள். \q1 உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்; \q2 ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், \q1 கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்; \q2 பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர். \q1 \v 14 யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு, \q2 உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும். \q1 அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக \q2 தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம். \b \q1 \v 15 ஆசாரியர்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், \q2 பரிசுத்த உபவாசத்தை அறிவியுங்கள்; \q2 பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். \q1 \v 16 மக்களை ஒன்றுசேர்த்து, \q2 சபையை பரிசுத்தம் செய்யுங்கள். \q1 முதியோரை ஒன்றுகூட்டுங்கள், \q2 பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் \q2 சேர்த்துக்கொள்ளுங்கள். \q1 மணமகன் தன் அறையையும், \q2 மணமகள் தன் படுக்கையையும் விட்டுப் புறப்படட்டும். \q1 \v 17 யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; \q2 ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். \q1 அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். \q2 உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே \q2 நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். \q1 ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ \q2 என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” \q2 என்று சொல்வார்களாக. \s1 யெகோவாவின் பதில் \q1 \v 18 அப்பொழுது யெகோவா தமது நாட்டின்மேல் வைராக்கியங்கொண்டு, \q2 தமது மக்களில் அனுதாபங்கொள்வார். \p \v 19 யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது: \q1 “இதோ, நான் உங்களுக்குத் தானியத்தையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் \q2 முழுமையாய் திருப்தியளிக்கும் வகையில் அனுப்புகிறேன்; \q1 நான் இனியும் பிற தேசத்தாருக்கு உங்களை \q2 நிந்தையாக வைக்கமாட்டேன். \b \q1 \v 20 “வடதிசைப் படைகளை உங்களைவிட்டுத் தூரமாய்த் விலக்கிவிடுவேன்; \q2 பாழடைந்த வறண்ட நாட்டிற்கு அவர்களைத் தள்ளிவிடுவேன். \q1 அதன் முன்னணிப் படைகளை கிழக்கே சாக்கடலிலும், \q2 அதன் பின்னணிப் படைகளை மேற்கே மத்திய தரைக்கடலிலும் தள்ளுவேன். \q1 அங்கே அவற்றின் நாற்றமும் \q2 தீய வாடையும் நாட்டின் மேலெழும்பும்.” \b \q1 நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். \q2 \v 21 நாடே நீ பயப்படாதே, \q2 மகிழ்ந்து களிகூரு; \q1 நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். \q2 \v 22 காட்டு மிருகங்களே, பயப்படாதேயுங்கள், \q2 வனாந்திரத்தின் மேய்ச்சலிடங்கள் பசுமையாகின்றன. \q1 மரங்கள் கனி கொடுக்கின்றன; \q2 அத்திமரமும் திராட்சைக்கொடியும் நிறைவாய்ப் பலனளிக்கின்றன. \q1 \v 23 சீயோன் மக்களே, மகிழுங்கள், \q2 உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் களிகூருங்கள். \q1 ஏனெனில் அவர் தம் நீதியை நிலைநாட்ட \q2 உங்களுக்கு முன்மாரியைத் தந்திருக்கிறார். \q1 முன்போலவே உங்களுக்கு முன்மாரியையும் \q2 பின்மாரியையும் நிறைவாய்ப் பொழிகிறார். \q1 \v 24 சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்; \q2 ஆலைகள் புதிய திராட்சை இரசத்தினாலும் எண்ணெயினாலும் நிரம்பிவழியும். \b \q1 \v 25 நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பின பச்சைப்புழுக்களும், \q2 இளம் வெட்டுக்கிளிகளும், துள்ளும் வெட்டுக்கிளிகளும், \q2 வளர்ந்த வெட்டுக்கிளிகளும் தின்று அழித்த வருடங்களுக்குப் பதிலாக, \q1 உங்களுக்கு ஈடுசெய்வேன். \q1 \v 26 நீங்கள் திருப்தியாகும்வரை சாப்பிடுவதற்கு \q2 உங்களுக்கு உணவு நிறைவாய் இருக்கும். \q1 அப்பொழுது உங்களுக்காக அதிசயங்கள் செய்த \q2 உங்கள் யெகோவாவாகிய இறைவனின் பெயரைத் துதிப்பீர்கள்; \q1 என்னுடைய மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள். \q1 \v 27 அப்பொழுது நான் இஸ்ரயேலில் உங்களுடன் இருக்கிறேன் என்றும், \q2 உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்றும், \q2 வேறொருவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; \q1 என் மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள். \s1 யெகோவாவின் நாள் \q1 \v 28 “அதன்பின்பு, \q2 நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். \q1 உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்; \q2 உங்கள் முதியவர்கள் கனவுகளையும் \q2 உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள். \q1 \v 29 மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும் \q2 என் ஆவியைப் பொழிவேன். \q1 \v 30 வானத்திலும் பூமியிலும் \q2 இரத்தமும் நெருப்பும் புகை மண்டலமுமாகிய \q2 அதிசயங்களை நான் காண்பிப்பேன். \q1 \v 31 பெரிதும் பயங்கரமுமான யெகோவாவின் அந்த நாள் வருமுன்பே, \q2 சூரியன் இருண்டுபோகும், \q2 சந்திரன் இரத்தமாக மாறும். \q1 \v 32 அப்போது யெகோவாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற, \q2 யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்; \q1 யெகோவா சொன்னதுபோலவே, \q2 மீந்திருப்பவர்கள் மத்தியிலிருந்து \q2 யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்களுக்கு, \q1 சீயோன் மலையிலும் எருசலேமிலும் \q2 மீட்பு உண்டு. \c 3 \s1 பிறநாடுகள் நியாயந்தீர்க்கப்படுதல் \q1 \v 1 “அந்நாட்களிலும் அவ்வேளையிலும், \q2 யூதாவையும் எருசலேமையும் முன்னிருந்த நிலைக்கு நான் திரும்பவும் கொண்டுவருவேன். \q1 \v 2 நான் எல்லா நாடுகளையும் ஒன்றுசேர்த்து, \q2 அவர்களை யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவேன். \q1 அங்கே நான் என் உரிமைச்சொத்தான இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு \q2 அவர்களுக்கு விரோதமாய் நியாயந்தீர்பேன்; \q1 ஏனெனில் அவர்கள் என் மக்களை பிறநாடுகள் மத்தியில் சிதறடித்து, \q2 என் நாட்டையும் தங்களிடையே பங்கிட்டுக்கொண்டார்கள். \q1 \v 3 என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள், \q2 வேசிகளுக்கான கூலியாக ஆண்பிள்ளைகளைக் கொடுத்தார்கள், \q2 தாங்கள் திராட்சை இரசம் குடிப்பதற்காக பெண்பிள்ளைகளை விற்றார்கள். \p \v 4 “தீரு, சீதோன் பட்டணங்களே, பெலிஸ்தியரின் எல்லா பிரதேசங்களே, எனக்கு விரோதமாய் உங்களுக்கு என்ன இருக்கிறது? நான் ஏதாவது செய்ததற்காகவா நீங்கள் என்னைப் பழிவாங்குகிறீர்கள்? அப்படி நீங்கள் என்னைப் பழிவாங்கினால், நான் தாமதமின்றி விரைவாக நீங்கள் செய்தவற்றை உங்கள் சொந்த தலைமேலேயே திருப்புவேன். \v 5 என் வெள்ளியையும் என் தங்கத்தையும் நீங்கள் எடுத்து, என் சிறந்த திரவியங்களையும் அள்ளிக்கொண்டு, உங்கள் கோயில்களுக்குப் போனீர்கள். \v 6 யூதா, எருசலேம் மக்களை அவர்கள் தாய்நாட்டிலிருந்து தூரமாய் அனுப்புவதற்காக அவர்களைக் கிரேக்கருக்கு நீங்கள் விற்றுவிட்டீர்கள். \p \v 7 “இதோ, நீங்கள் விற்ற இடங்களிலிருந்து அவர்களை மீண்டும் எழுப்பப்போகிறேன். நீங்கள் செய்ததை உங்கள் தலைகள் மேலேயே திருப்புவேன். \v 8 உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா மக்களுக்கு விற்பேன். அவர்கள் அவர்களை தூரதேசத்திலுள்ள நாட்டாரான சபேயருக்கு விற்பார்கள்.” இதை யெகோவாவே சொன்னார். \q1 \v 9 பிற நாடுகளிடையே இதை அறிவியுங்கள்; \q2 யுத்தத்திற்குத் தயாராகுங்கள்; \q1 இராணுவவீரரை எழுப்புங்கள்; \q2 போர்வீரர்கள் அனைவரும் நெருங்கிப்போய் தாக்கட்டும். \q1 \v 10 உங்கள் மண்வெட்டிகளை வாள்களாகவும், \q2 உங்கள் வெட்டுக்கத்திகளை ஈட்டிகளாகவும் அடியுங்கள். \q1 பெலவீனன், \q2 “நான் பெலனுள்ளவன்!” என்று சொல்லட்டும். \q1 \v 11 சுற்றுப்புறம் எங்குமுள்ள நாடுகளே, நீங்கள் எல்லோரும் விரைந்துவந்து, \q2 அங்கே ஒன்றுகூடுங்கள். \b \q1 யெகோவாவே உமது படைவீரர்களைக் கொண்டுவாரும்! \b \q1 \v 12 “பிறநாடுகள் எழும்பட்டும்; \q2 யோசபாத்தின் பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறிப் போகட்டும். \q1 அங்கே நான், சுற்றுப்புறம் எங்குமுள்ள பிறநாடுகள் அனைத்தையும் \q2 நியாயந்தீர்ப்பதற்காக உட்காருவேன். \q1 \v 13 விளைச்சல் முதிர்ந்துள்ளது, \q2 அரிவாளை நீட்டி அறுங்கள். \q1 திராட்சைப்பழ ஆலைகள் நிரம்பியுள்ளன, \q2 வந்து திராட்சைப் பழங்களை மிதியுங்கள்; \q2 இரசத் தொட்டிகளும் நிறைந்து பொங்கி வழிகின்றன; \q1 இவ்வளவாய் அவர்களின் கொடுமை பெரியது!” \b \q1 \v 14 தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் \q2 மக்கள் கூட்டங்கூட்டமாய் இருக்கின்றனர். \q1 தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் \q2 யெகோவாவின் நாள் சமீபித்துள்ளது. \q1 \v 15 சூரியனும் சந்திரனும் இருளடையும், \q2 நட்சத்திரங்கள் இனி வெளிச்சம் கொடாதிருக்கும். \q1 \v 16 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, \q2 எருசலேமிலிருந்து முழங்குவார்; \q2 வானமும் பூமியும் அதிரும். \q1 ஆனால் யெகோவா தம் மக்களுக்குப் புகலிடமும் \q2 இஸ்ரயேல் மக்களுக்கு அரணான கோட்டையுமாய் இருப்பார். \s1 இறைவனின் மக்களுக்கு ஆசீர்வாதம் \q1 \v 17 “அப்பொழுது என் பரிசுத்த மலையாகிய சீயோனில் வாழ்கிற \q2 உங்கள் இறைவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். \q1 எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; \q2 பிறநாட்டார் இனி ஒருபோதும் அதைக் கடந்து செல்லமாட்டார்கள். \b \q1 \v 18 “அந்நாட்களில் மலைகளில் புதிய திராட்சை இரசம் பொழியும், \q2 குன்றுகள் பாலாய் வழிந்தோடும்; \q2 யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பியோடும். \q1 யெகோவாவின் ஆலயத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பி, \q2 சித்தீம் பள்ளத்தாக்கிற்கு தண்ணீர் பாய்ச்சும். \q1 \v 19 யூதா நாட்டில் குற்றமற்ற இரத்தம் சிந்தி, \q2 அவர்களுக்குச் செய்த கொடுமையின் நிமித்தம் \q1 எகிப்து பாழாகும், \q2 ஏதோம் பாழடைந்து பாலைவனமாகும். \q1 \v 20 யூதா என்றென்றும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் \q2 குடியிருக்கும் இடமாகும். \q1 \v 21 அவர்களுடைய இரத்தப்பழியை நான் தண்டியாமல் விடுவேனோ? \q2 நான் தண்டிப்பேன்.” \b \qc யெகோவா சீயோனில் குடியிருக்கிறார்.